பதிவு செய்த நாள்
16 ஜூன்2021
00:42
புதுடில்லி:‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ நிறுவனம், கர்நாடகாவில் உள்ள பிடாடியில் இருக்கும் இரண்டு ஆலைகளிலும், பகுதியளவிலான உற்பத்தியை துவக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இங்கு, 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரலில், கொரோனா தொற்று அதிகரிக்கவும், இந்நிறுவனம், பிடாடி ஆலைகளில் உடனடியாக தற்காலிக பணி நிறுத்தத்தை அறிவித்தது.ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதியும்; அரசின் அறிவிப்புகளுக்கு ஏற்பவும், பணி நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தது.
இந்த இரு ஆலைகளும் சேர்ந்து, ஆண்டுக்கு, 3.10 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டவையாகும்.கொரோனா பரவலை முன்னிட்டு நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு, புதிய இயல்பு நிலைக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|