பதிவு செய்த நாள்
18 ஜூன்2021
22:38
புதுடில்லி:‘இந்தியா பெஸ்டிசைட்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இம்மாதம் 23ம் தேதியன்று துவங்க இருப்பதை அடுத்து, இந்நிறுவனம் ஒரு பங்கின் விலை, 290 – 296 ரூபாய் என நிர்ணயித்து அறிவித்துள்ளது.
வேளாண் வேதியியல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த, இந்தியா பெஸ்டிசைட்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்துக்கு உத்தர பிரதேசத்தில் இரண்டு ஆலைகள் உள்ளன.இந்த புதிய பங்கு வெளியீடு வரும் 23ம் தேதி துவங்கி, 25 வரை நடைபெற உள்ளது. துணிகர முதலீட்டாளர்களுக்கான பங்கு வெளியீடு 22ம் தேதி துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த, 800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டில், 100 கோடி ரூபாய் மதிப்பிற்கு புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன.இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, நடைமுறை மூலதன தேவைகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|