இறக்கை விரிக்கப் போகிறது ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் இறக்கை விரிக்கப் போகிறது ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் ...  வளர்ச்சி 9.6 சதவீதம் மூடிஸ் நிறுவனம் கணிப்பு வளர்ச்சி 9.6 சதவீதம் மூடிஸ் நிறுவனம் கணிப்பு ...
உலகின் பெரும் நன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில் இந்தியாவின் ஜாம்ஷெட் ஜி டாடா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
21:39

மும்பை:கடந்த நுாற்றாண்டில், உலகளவிலான நன்கொடையாளர்கள் பட்டியலில், மிகப் பெரிய பரோபகாரியாக இருந்தவர், இந்தியாவை சேர்ந்த டாடா குழுமத்தின் நிறுவனரான ஜாம்ஷெட் ஜி டாடா என, ‘ஹுருன்’ மற்றும் எடெல்கிவ் பவுண்டேஷன்’ இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, கடந்த நுாற்றாண்டில், உலகளவிலான, ‘டாப் – 50’ நன்கொடையாளர்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளன.இதில், 102 பில்லியன் டாலர் அளவுக்கு நன்கொடை வழங்கி, முதலிடத்தை வகிக்கிறார், டாடா குழுமத்தின் நிறுவனரான, ஜாம்ஷெட் ஜி டாடா. அவர் வழங்கிய நன்கொடை, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 7.55 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

பட்டியலில் இவருக்கு அடுத்தபடியாக தான், பில்கேட்ஸ், வாரன் பபெட், ஜார்ஜ் சோரஸ், ராக்பெல்லர் போன்றவர்கள் வருகின்றனர்.இந்த அறிக்கையை வெளியிட்ட, ‘ஹுருன்’ நிறுவனத்தின் தலைவரும், தலைமை ஆராய்ச்சியாளருமான ரூபர்ட் ஹூக்வெர்ப், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த நுாற்றாண்டில் பிரபலமான நன்கொடையாளர்கள் குறித்து யோசிக்கும்போது, அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தான் நம் மனதில் எழுகிறார்கள்.

‘‘ஆனால் உண்மையில், ஜாம்ஷெட் ஜி டாடா தான் மிகப்பெரிய அளவில் நன்கொடைகளை வழங்கி உள்ளார்,’’ என தெரிவித்தார்.கல்வி, சுகாதாரம் ஆகிய இரு துறைகளுக்கும், டாடா அதிகளவு நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்.இந்த, 50 பேர் கொண்ட பட்டியலில், டாடாவை அடுத்து இடம்பெற்ற இன்னொரு ஒரே இந்தியர், ‘விப்ரோ’ நிறுவனர் அஜீம் பிரேம்ஜி ஆவார்.

நோபல் பரிசை ஏற்படுத்திய, ஆல்ப்ரட் நோபல் கூட இந்த வரிசையில் இடம்பெறவில்லை என்பதும் இன்னொரு குறிப்பிடத்தக்க தகவலாகும்.இந்த, 50 பரோபாரிகளில், 38 பேர், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 5 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.சீனாவிலிருந்து 3 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், பட்டியலில் இடம்பெற்றிருக்கும், 50 பேர்களில், 37 பேர் இன்று உயிருடன் இல்லை. 13 பேர் மட்டுமே உள்ளனர்.கடந்த நூற்றாண்டில் இந்த, 50 பேரும் வழங்கிய மொத்த தொகை, 61.57 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இன்றைய கோடீஸ்வரர்கள் குறித்து, ‘ஹுருன்’ நிறுவனர் பேசும்போது, ‘‘அவர்கள் பரோபகாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ‘‘அவர்கள் கொடுப்பதை விட, பலமடங்கு வேகமாக பணத்தை சம்பாதிக்கிறார்கள்,’’ என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)