மஹிந்திரா புதிய பி.எஸ்.ஐ.வி கட்டுமான உபகரண வரம்பு அறிமுகம்மஹிந்திரா புதிய பி.எஸ்.ஐ.வி கட்டுமான உபகரண வரம்பு அறிமுகம் ...  ஆயிரம் சந்தேகங்கள்   அரி­தான நாண­யங்­களை எங்கே மாற்­ற­லாம்? ஆயிரம் சந்தேகங்கள் அரி­தான நாண­யங்­களை எங்கே மாற்­ற­லாம்? ...
டி.டி.எஸ்., அபராதத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2021
19:38

டி.டி.எஸ்., எனப்படும் வருமான வரி பிடித்தம் தொடர்பான புதிய விதிகள், வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதற்கான அறிவிப்பு, 2021 பட்ஜெட்டில் வெளியானது. இது தொடர்பாக, வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால், இரட்டிப்பு டி.டி.எஸ்., செலுத்த வேண்டும் மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம். வருமான வரி பிடித்தம் தொடர்பான புதிய விதிகள் செயல்படும் விதம் பற்றி பார்க்கலாம்.


டி.டி.எஸ்., ஏன்?


வருமானம் ஈட்டும் போது, மூலத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இது, டி.டி.எஸ்., என குறிப்பிடப்படுகிறது. இதே போல பொருட்களை வாங்கும் போதும், வரி பிடித்தம் செய்யப்படுகிறது. பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை அறியும் வகையில் இவ்வாறு செய்யப்படுகிறது.


வரி பிடித்தம்:


மாத ஊதியம், டிவிடெண்ட், வட்டி வருமானம், வாடகை, ஒப்பந்த வருமானம் உள்ளிட்டவற்றுக்கு வருமான வரி பிடித்தம் உண்டு. இது, வெவ்வேறு விதமாக அமைகிறது. டிவிடெண்ட் மீது, 10 சதவீதம் பிடித்தம் என்றால், ஒப்பந்த பணம் மீது 10 சதவீதம் வரை இருக்கலாம். விற்பனை வருமானம், வாடகைக்கு 5 சதவீதம்.


விதியில் மாற்றம்:


இதுவரை, ‘பான் கார்டு’ இல்லாதவர்களிடம் இருந்து அதிக வரி பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. புதிய விதிமுறைபடி, ஆண்டுக்கு 50 ஆயிரத்துக்கு மேல் டி.டி.எஸ்., அல்லது டி.சி.எஸ்., பிடித்தம் செய்யப்பட்டிருந்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில், இரட்டிப்பு வரி பிடித்தம் செய்யப்படும்.


வட்டி வருமானம்:



டிவிடெண்ட், வைப்பு நிதி வட்டி, சேவை வருமானம் போன்றவற்றுக்கு இந்த விதி பொருந்தும். மாத ஊதியம், இதர சில வருமானங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பி.எப்., பணத்திற்கும் விலக்கு உண்டு. குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வரி பிடித்தம் செய்யப்பட்டவர்கள் பட்டியலை, வருமான வரித்துறை தயார் செய்துள்ளது.


பாதிப்பு என்ன?



முந்தைய இரண்டு நிதியாண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் விபரம் கணக்கில் கொள்ளப்படும். எனவே, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு வரி தாக்கல் செய்யாதவர்கள், இந்த வரம்பிற்குள் வந்தால் இரட்டிப்பு வரி செலுத்த வேண்டும். இதை தவிர்க்க, தாமதமாகவும் வரி தாக்கல் செய்யலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)