பதிவு செய்த நாள்
29 ஜூன்2021
20:10
புதுடில்லி:இந்தியாவில் வேலை பார்க்க கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கி இருப்பதாக, சி.ஐ.சி., எனும், கடன் தகவல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நாட்டில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, மொத்தம், 40.07 கோடி பேர் ஆகும். இதில், சில்லரை கடன் சந்தையில் கிட்டத்தட்ட, 20 கோடி பேர் கடன் பெற்றவர்களாக இருக்கின்றனர்.இவர்கள், குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கடன் அல்லது கிரெடிட் கார்டு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அதிக ஆர்வம்
கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நிறுவன கடன்கள் விஷயத்தில், வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து, அவை சில்லரை கடன் வழங்குவதில் அதிக ஆர்வம் காட்ட துவங்கி உள்ளன. ஆனால், கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பின், சில்லரை கடன் பிரிவில் ஏற்பட்டு வரும் பின்னடைவு, சற்று கவலை அளிப்பதாக இருக்கிறது.தரவுகளின்படி, கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில், 18- – 33 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் கடன் வழங்குவது, 8 சதவீதமாக மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது.மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட, புதிதாக கடன் வாங்கும் நபர்கள், தனிநபர் கடன் அல்லது நுகர்பொருள் கடன்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.கடன் வாங்குபவர்களில், பெண்களின் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
விசுவாசம்
வாகன கடனை பொறுத்தவரை, இவர்களது பங்களிப்பு, 15 சதவீதமாக இருக்கிறது. வீட்டுக் கடனை பொறுத்தவரை, 31 சதவீதமாகவும்; தனிநபர்கடன், 22 சதவீதமாகவும்; நுகர்பொருள் கடன், 25 சதவீதமாகவும் இருக்கிறது.மேலும், புதிதாக கடன் பெறுவோர், தங்களுக்கு முதன் முதலாக கடன் வழங்கிய நிறுவனத்திற்கே அதிக விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் மனதில், முதன் முதலாக கடன் வழங்கிய நிறுவனம் குறித்து, சாதகமான சிந்தனை இருக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|