பதிவு செய்த நாள்
30 ஜூன்2021
20:25

புதுடில்லி:‘மைக்ரோசாப்ட்’ இணை நிறுவனர் பில்கேட்ஸ், அவர் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்ட நிலையில், பெண்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு புகார்கள் தற்போது வரத் துவங்கி இருக்கின்றன.
அவர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களிடம் தவறான அணுகுமுறை கொண்டவராக இருந்ததாகவும்; மக்கள் தொடர்பு விஷயத்தில் அவர் வல்லவராக இருந்ததால், தன்னை சிறந்தவராக காட்டிக் கொண்டதாகவும், ‘பிசினஸ் இன்சைடர்’ இணையதள ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த ஊடக செய்தியில், பில்கேட்ஸ் கோபமும், குறுகிய மனமும் கொண்டவர் என, நான்கு பெண் ஊழியர்கள் கூறியுள்ளனர். பில்கேட்ஸ், கடந்த மே மாதம் மெலிண்டாவிடமிருந்து விவாகரத்துபெற்றார்.
குற்றச்சாட்டு
இதன் பின்னர் சில ஊடகங்கள், பில்கேட்ஸ் பணியிடத்தில் அவரது பொருத்தமற்ற நடத்தை மற்றும் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான, ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான அவரது உறவு ஆகியவை குறித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
முன்னாள் மைக்ரோ சாப்ட் நிர்வாக குழு உறுப்பினரான மரியா கிளாவே, பிசினஸ் இன்சைடரிடம், ‘‘பில்கேட்ஸ் பெண் ஊழியர்களால் பரிந்துரைக்கப்படுவதை அதிகம் ஏற்பதில்லை.‘‘அறையில் அவர் தான் புத்திசாலி நபர் என்பது போல் நடந்து கொள்வார்,’’ என குற்றம்சாட்டி உள்ளார்.‘நியூயார்க் டைம்ஸ்’ இதழும், பில்கேட்ஸ் பெண் ஊழியர்களை இரவு உணவுக்கு வெளியே அழைத்த சம்பவங்களை குறிப்பிட்டுள்ளது.
‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ தனி அறிக்கை ஒன்றில், 2020 மார்ச்சில், நிர்வாக குழுவிலிருந்து பில்கேட்ஸ் விலகுவதற்கு முன்பு, ஒரு ஊழியருடனான அவரின் முந்தைய காதல் உறவு குறித்து, நிறுவனம் விசாரணையை துவங்கியது என தெரிவித்துள்ளது.
பரோபகாரம்
இது குறித்து பில்கேட்சின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘‘கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விவகாரம் இருந்தது. ஆனால் அது இணக்கமாக முடிந்தது. ‘‘நிர்வாக குழுவிலிருந்து அவர் விலகியதற்கும், இவற்றுக்கும் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. பில்கேட்ஸ் பரோபகாரத்தில் பல ஆண்டுகளாக தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார்,’’ என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|