பதிவு செய்த நாள்
10 ஜூலை2021
20:10
புதுடில்லி:தொற்றுநோய் பரவாமல் இருக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஜூன் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை மீண்டும் அதிகரித்து உள்ளது. முந்தைய மே மாதத்தில், அதற்கு முன் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு தேவை குறைந்துவிட்ட நிலையில், ஜூன் மாதத்தில் மீட்சி ஏற்பட்டுள்ளது.
இது, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்துள்ளதை காட்டுவதாக உள்ளது.நாட்டின் எரிபொருள் தேவை, ஜூன் மாதத்தில், அதற்கு முந்தைய மே மாதத்தை விட 8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 1.5 சதவீதம் அதிகமாகும்.பெட்ரோலை பொறுத்தவரை, கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 21 சதவீதம் அதிகரித்துள்ளது. டீசல், மே மாதத்தை விட 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிட்டால் 1.5 சதவீதம் குறைவாகும்.
தடுப்பூசி போடுவது அதிகரித்தது, தளர்வுகள் அதிகரிக்கப்பட்டது, வணிக செயல்பாடுகள் அதிகரித்தது போன்ற காரணங்களால், ஜூன் மாதத்தில் தேவை அதிகரித்துள்ளது.சமையல் எரிவாயுவை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 9.7 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|