பதிவு செய்த நாள்
10 ஜூலை2021
22:59
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தின் வசம் இருக்கும் ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்குகள், அரசின் வசம் இருக்கும் பங்குகளுடன் சேர்த்து விற்பனை செய்யப்படும் என, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையான, டி.ஐ.பி.ஏ.எம்., தெரிவித்துள்ளது. இருப்பினும், எவ்வளவு பங்குகளை முதலில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்கவில்லை.
மத்திய அரசு, எல்.ஐ.சி., ஆகிய இரண்டும் சேர்ந்து, ஐ.டி.பி.ஐ., வங்கியின் 94 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்து உள்ளன. இதில், மத்திய அரசின் வசம் 45.48 சதவீத பங்குகளும், எல்.ஐ.சி.,யின் வசம் 49.24 சதவீத பங்குகளும் உள்ளன. மற்றவை பிறர் வசம் உள்ளன.கடந்த மே மாதம், அமைச்சரவை குழு, எல்.ஐ.சி., மத்திய அரசு ஆகிய இரண்டும் தங்கள் கைவசம் இருக்கும் ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
எல்.ஐ.சி., மத்திய அரசு ஆகிய இரண்டும் சேர்ந்து, பங்குகளை விற்பனை செய்ய இருப்பதால், ஒரே ஒரு பரிவர்த்தனை ஆலோசகர் மட்டுமே இருப்பார் என, டி.ஐ.பி.ஏ.எம்., தெரிவித்துள்ளது. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பங்குவிலக்கல்கள் வாயிலாக 1.75 லட்சம் கோடி ரூபாயை ஈட்ட இலக்கு வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|