பதிவு செய்த நாள்
10 ஜூலை2021
23:11
புதுடில்லி:நாட்டின் ‘ஆன்லைன்’ வர்த்தக சந்தை, 2025ம் ஆண்டில், கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சந்தையாக உயரும் என, இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான, ‘பிக்கி’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:இது நாள் வரை, ஆன்லைன் வர்த்தகத்தை ஒரு மாற்று வாய்ப்பாகவே நுகர்வோர் பார்த்து வந்தனர்.ஆனால், இப்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் வர்த்தகத்தை பிரதான வாய்ப்பாகவே கருத துவங்கி உள்ளனர். ‘பரிவர்த்தனை’ என்ற நிலையிலிருந்து, ‘நம்பிக்கை’ என்ற நிலைக்கு, ஆன்லைன் வர்த்தகம் மாறி உள்ளது.
கடந்த 2020ல், ஆன்லைன் வர்த்தக சந்தையின் மதிப்பு 4.80 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது கொரோனா பரவலுக்கு பிறகு, ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இது 2025ம் ஆண்டில், 14.10 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|