பதிவு செய்த நாள்
18 ஜூலை2021
19:11
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், நாட்டின் முக்கிய நகரங்களில் வீடு விற்பனை, 67 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
‘ரியல் எஸ்டேட்’ ஆலோசனை நிறுவனமான ‘நைட் பிராங்க் இந்தியா’ நடத்திய ஆய்வில், 2021 நிதியாண்டின் முதல் பாதியில், நாட்டின் முக்கிய நகரங்களில் 99 ஆயிரத்து 416 வீடுகள் விற்பனை ஆகியிருப்பதாகவும், இதே காலத்தில் 1 லட்சத்து 3,238 புதிய வீடுகள் துவங்கிஇருப்பதாகவும் தெரிவிக்கிறது.கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியிலும் வீடுகள் விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டு உள்ளதாக கூறும் இந்த அறிக்கை, விற்கப்படாத வீடுகள் எண்ணிக்கை 1 சதவீதம் குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் புனே ஆகிய இரண்டு நகரங்களில் அதிக அளவில் வீடுகள் விற்பனையானது, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.கொரொனா இரண்டாம் அலைக்கு மத்தியில், மத்திய மற்றும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. ஐம்பது லட்சத்திற்கும் குறைவான விலையிலான வீடுகள் விற்பனை, லேசான சரிவை சந்தித்துள்ளது. பணியிழப்பு போன்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இப்பிரிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|