நாளை தங்க பத்திர வெளியீடு 1 கிராம் 4,790 ரூபாய் நாளை தங்க பத்திர வெளியீடு 1 கிராம் 4,790 ரூபாய் ...  சேவைகள் துறை ஏற்றுமதி 28 சதவீத வளர்ச்சி காணும் சேவைகள் துறை ஏற்றுமதி 28 சதவீத வளர்ச்சி காணும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இரண்டு நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2021
20:32

புதுடில்லி:நாளை, இரண்டு முக்கிய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.

கார் டிரேடு டெக்: ‘ஆன்லைன்’ வாயிலாக வாடிக்கையாளர்கள், பழைய மற்றும் புதிய வாகனங்களை வாங்குவதற்கு உதவும் நிறுவனமான, ‘கார் டிரேடு டெக்’ நாளை பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்நிறுவன பங்குகள் விலை 1,585 – 1,618 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு நாளை துவங்கி 11ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், ‘கார்வாலே, கார் டிரேடு, ஸ்ரீராம் ஆட்டோ மால், பைக் வாலே, கார் டிரேடு எக்ஸ்சேஞ்ச், ஆட்டோ பிஸ்’ என பல பிராண்டு பெயர்களில் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது.

நுவகோ விஸ்டாஸ்: இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு நாளை துவங்கி 11ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிறுவன பங்கின் விலை 560- – 570 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.சிமென்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், ‘நிர்மா’ குழுமத்தை சேர்ந்ததாகும்.

பங்கு வெளியீட்டின்போது 1,500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 3,500 கோடி ரூபாய்க்கு புரமோட்டரான, ‘நியோகி என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 26 பங்குகளையோ அல்லது அதன் மடங்குகளிலோ வாங்கிக் கொள்ளலாம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)