பதிவு செய்த நாள்
21 ஆக2021
19:48
புதுடில்லி:‘அதானி’ குழுமத்தை சேர்ந்த, சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான, ‘அதானி வில்மார்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கேட்டு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு அண்மையில் விண்ணப்பித்திருந்தது.
ஆனால், செபி அனுமதி வழங்காமல், தற்காலிகமாக விண்ணப்பத்தின் மீதான முடிவை நிறுத்தி வைத்துள்ளது.அதானி வில்மார் நிறுவனம், கடந்த 3ம் தேதியன்று, ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கான விண்ணப்பத்தை செபிக்கு சமர்ப்பித்திருந்தது. இதை பரிசீலித்த செபி, காரணம் எதையும் குறிப்பிடாமல், முடிவை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அதானி வில்மார் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 4,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம், ‘பார்ச்சூன்’ எனும் பிராண்டு பெயரில், சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இது, அதானி மற்றும் வில்மார் குழுமங்களின் கூட்டு முயற்சி ஆகும். புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, உற்பத்தி ஆலையை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|