பதிவு செய்த நாள்
27 ஆக2021
21:11
புதுடில்லி;பட்ஜெட் விமான சேவை நிறுவனமான, ‘கோ பர்ஸ்ட்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
‘வாடியா’ குழுமத்துக்கு சொந்தமான, கோ பர்ஸ்ட் நிறுவனம், மே மாதத்தில் பங்கு
வெளியீட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், செபி சில கேள்விகள் எழுப்பி, ஜூன் மாதத்தில் தற்காலிகமாக அனுமதி வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.துவக்கத்தில், ‘கோ ஏர்’ என அழைக்கப்பட்டு வந்த இந்நிறுவனத்தின் பெயர், கடந்த மே மாதத்தில், கோ பர்ஸ்ட் என மாற்றப்பட்டது.
இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,600 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுஉள்ளது. ‘இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட்’ ஆகிய நிறுவனங்களுக்குப் பின், இந்திய பங்கு
சந்தையில் பட்டியலிடப்படும் மூன்றாவது நிறுவனம், கோ பர்ஸ்ட்.
கடந்த 2005ம் ஆண்டு இத்துறையில் நுழைந்த இந்நிறுவனம், 10.8 சதவீத சந்தை
பங்களிப்பை கொண்டு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|