பதிவு செய்த நாள்
27 ஆக2021
21:12
புதுடில்லி: ‘சிப்’ என பொதுவாக அழைக்கப்படும், செமிகண்டக்டர்களுக்கான தட்டுப்பாடு,
பல்வேறு துறையினரை சோர்வடைய வைத்துள்ளது.
இந்நிலையில், உலகளவில் மிகப் பெரிய செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனம், விலையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக வந்திருக்கும் செய்தியால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வீட்டு உபயோக சாதனங்கள் துவங்கி, வாகன தயாரிப்பு வரை பலவற்றில் இந்த மின்னணு சிப்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இந்நிலையில், உலகின் மிகப் பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான, டி.எஸ்.எம்.சி., எனும், ‘தைவான் செமி கண்டக்டர்
மேனுபேக்சரிங்’ நிறுவனம், சிப்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட சிப்களின் விலையை, 10 சதவீதம் அளவுக்கும், மற்றவை 15 முதல் 20 சதவீதம் வரையும் அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இந்நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில், விரிவாக்க பணிகளுக்காக 7.4 லட்சம் கோடி
ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|