பதிவு செய்த நாள்
29 செப்2021
20:03
புதுடில்லி:‘திவான் ஹவுஸிங் பைனான்ஸ்’ நிறுவனத்தை 38 ஆயிரத்து 50 கோடி ரூபாய்க்கு முழுமையாக கையகப்படுத்திவிட்டதாக, ‘பிரமல் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்திய திவால் சட்டத்தின் கீழ், நிதிச் சேவை துறையில் மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை இதுவாகும் என, பிரமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் 94 ஆயிரம் கடன் வழங்குனர்கள் இந்த மீட்பு திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர். மேலும், பிரமல் நிறுவனம் இந்த திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வ் வங்கி, இந்திய சந்தை போட்டி ஆணையம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஆகியவற்றின் அனுமதியையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக, திவான் ஹவுஸிங் நிறுவனத்தின் 70 ஆயிரம் கடன் வழங்குனர்கள், அவர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகையில் 46 சதவீதத்தை பெற முடியும் என்றும் பிரமல் அறிவித்துள்ளது.இணைப்புக்கு பின், புதிய நிறுவனம்,‘பிரமல் கேப்பிட்டல் அண்டு ஹவுஸிங் பைனான்ஸ்’ என்ற பெயரில் செயல்படும்.
இந்நிறுவனம் 100 சதவீதம் பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருக்கும்.நிதிச் சேவைகள் கிடைக்காத அல்லது, போதுமான அளவில் கிடைக்காதவர்களுக்கு உதவும் வகையில், புதிய நிறுவனத்தின் செயல்பாடுகள் இருக்கும் என, பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமல் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|