வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ‘சூப்பர் பணக்காரர்கள்’ பட்டியல் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி ‘சூப்பர் பணக்காரர்கள்’ பட்டியல் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘போர்டு’ ஆலைகளை வாங்கும் முனைப்பில் 'டாடா மோட்டார்ஸ்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2021
22:21

புதுடில்லி:‘போர்டு இந்தியா’ நிறுவனம், இந்தியாவில் உள்ள அதன் இரண்டு ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்துவதாக கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில், இந்த ஆலைகளை வாங்கும் முயற்சியில், ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம் இறங்கி உள்ளதாக தெரிகிறது.அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும் போர்டு நிறுவனம், இந்தியாவில், சென்னை மற்றும் குஜராத்தில் சனாந்த் ஆகிய இடங்களில் ஆலைகளை நிறுவி, உற்பத்தியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் திடீரென இந்த இரு ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்தது.மேலும், இனி வாகனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, விற்பனையை தொடர இருப்பதாகவும் தெரிவித்தது.

போர்டு இந்தியா நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளில், 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போர்டு நிறுவனத்துக்கு சொந்தமான இவ்விரு ஆலைகளையும் வாங்க, டாடா மோட்டார்ஸ் முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த ஆலைகள், டாடா மோட்டார்ஸ் வசம் வரும்பட்சத்தில், அது போர்டு நிறுவனத்திடமிருந்து வாங்கும் இரண்டாவது வணிகமாக இருக்கும்.இதற்கு முன் போர்டு வசம் இருந்த, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ நிறுவனத்தை, கடந்த 2008ம் ஆண்டில் 17 ஆயிரத்து, 250 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

தற்சமயம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, மொத்தம் மூன்று ஆலைகள் இந்தியாவில் இருக்கின்றன.டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பயணியர் வாகன தயாரிப்பு வணிகத்தை தனியே பிரித்துவிடும் திட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆலைகளையும் வாங்கி, கூடுதல் முனைப்பு காட்ட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஆலைகள் எதுவும் இல்லாத நிலையில், இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என கருதுவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள போர்டு ஆலையை, ‘ஓலா’ நிறுவனம் வாங்க முயற்சி செய்து வருவதாகவும் அண்மையில் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)