பதிவு செய்த நாள்
09 அக்2021
19:48
மும்பை:பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடைய இடத்தை, பாரத ஸ்டேட் வங்கிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதையடுத்து, எஸ்.பி.ஐ., அமிதாப்பின் வாடகைதாரராக மாறியுள்ளது.
மும்பை ஜுஹூ பகுதியில், புதிதாக கிளை ஒன்றை அமைக்க எஸ்.பி.ஐ., இடம் தேடி வந்தது. இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான கட்டடம் ஒன்று வாடகைக்கு இருப்பதை அறிந்து, அதை அணுகி வாடகைக்கு பெற்றுள்ளது.குறிப்பிட்ட அந்த கட்டடத்தின் தரை தளத்தை வங்கி வாடகைக்கு எடுத்துள்ளது.
இந்த இடம், அமிதாப் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே உள்ளது. கிட்டத்தட்ட 3,150 சதுர அடி கொண்ட இடத்தை, குத்தகைக்கு கொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக்பச்சன் கையெழுத்திட்டு உள்ளார்.இந்த இடம் வங்கிக்கு 15 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படுவதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடகையை பொறுத்தவரை, மாதம் 18.9 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வாடகையில் 25 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், ‘செக்யூரிட்டி டெபாசிட்’டாக ஓராண்டு வாடகை அதாவது, 2.26 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|