பதிவு செய்த நாள்
15 அக்2021
01:00
மும்பை:மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’, நேற்று அதன் வரலாற்றில் முதன் முறையாக 61 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, புதிய சாதனையை படைத்துள்ளது.
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், சென்செக்ஸ் 568.90 புள்ளிகள் அதிகரித்து, 61306 புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ‘நிப்டி’யும் 176.80 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமான 18339 புள்ளிகளில் நிலைபெற்றது.
எட்டியது
சென்செக்ஸ் நடப்பு ஆண்டிலேயே 50 ஆயிரம் மற்றும், 60 ஆயிரம் புள்ளிகளை எட்டியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.கடந்த ஜனவரி 21ம் தேதியன்று, 50 ஆயிரம் புள்ளிகளையும்; செப்டம்பர் 24ல், 60 ஆயிரம் புள்ளிகளையும் சென்செக்ஸ் கடந்தது.
இதில் 60 ஆயிரம் புள்ளிகள் என்ற நிலையிலிருந்து, 61 ஆயிரம் புள்ளிகளை எட்ட, சென்செக்ஸ் 20 நாட்களை மட்டுமே எடுத்து கொண்டுள்ளது.
சிக்கல்கள்
இதற்கு முன்பாக, 57 ஆயிரம் புள்ளிகளிலிருந்து, 58 ஆயிரம் புள்ளிகளை தாண்ட, மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே ஆனதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.உலகளவில் பொருளாதார சரிவுகள், வினியோக சிக்கல்கள், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மிரட்டும் பணவீக்கம் என பல்வேறு சிக்கல்களுக்கு இடையே, இந்திய பங்குச் சந்தைகள் அண்மைக் காலமாக புதிய புதிய உச்சங்களை தொட்டு வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|