பதிவு செய்த நாள்
20 அக்2021
21:12
மும்பை:கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியாவில் தங்கத்தின் தேவை, நடப்பு ஆண்டில் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்; அடுத்த ஆண்டில் தேவை அதிகரிக்க கூடும் என்றும், உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.
இது குறித்து கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு ஆண்டிலும் கொரோனா பாதிப்புகள் காரணமாக, இந்தியாவில் தங்கத்தின் தேவை குறையக்கூடும். இருப்பினும், அடுத்த ஆண்டில் தேவைகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.நடப்பு ஆண்டில், தங்கத்தின் தேவை எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைந்துள்ளது.
இருப்பினும், இறக்குமதி வலுவாகவே இருக்கிறது. அத்துடன், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து, சில்லரை விற்பனைக்கான தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.அடுத்த ஆண்டில் தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும், கொரோனா தொற்று அதிகரித்தால், நிச்சயமற்ற நிலை ஏற்படக்கூடும்.
இந்தியாவை பொறுத்தவரை, வருமானம் அதிகரிக்கும்பட்சத்தில் தங்கத்தின் தேவையும் நீண்டகால அளவில் அதிகரிக்கும். தங்கத்தின் விலை, பணவீக்கம், பருவ காலம் ஆகியவை குறுகிய கால அளவில் தங்கத்தின் தேவையை பாதிக்கும். இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை கண்டு வருவதால், அடுத்த ஆண்டில் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|