பதிவு செய்த நாள்
20 அக்2021
21:13
வெளிநாட்டில் ஜாக் மா
சீன அரசால் சிக்கல்களுக்கு ஆளான, ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, ஒராண்டு காலத்துக்குப் பிறகு முதல் முறையாக, வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த ஓராண்டில் அவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாமல், சீனாவிலேயே இருந்தார்.
ஜாக் மா தற்போது, விவசாயம் மற்றும் தொழில்நுட்ப அறிவு குறித்த பயணத்தில் ஸ்பெயினில் உள்ளார்.
‘ரூபே கார்டு’ இனி பயமில்லை
ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றால் துவக்கப்பட்ட, தேசிய பணம் செலுத்தும் நிறுவனமான என்.பி.சி.ஐ., ‘ரூபே கார்டு’களுக்கு ‘டோக்கனிசேஷன் சிஸ்ட’த்தை அறிமுகம் செய்துள்ளது.இதன்படி, வணிகர்களுக்கு, கார்டுகளின் உண்மையான விவரங்களுக்கு பதிலாக, மாற்று விபரங்கள் வழங்கப்பட்டு, கார்டு குறித்த தகவல்கள் மற்றும் தரவுகள் பாதுகாக்கப்படும்.
முழுக்க உள்நாட்டு தயாரிப்பு
மின்சார பைக் தயாரிப்பு நிறுவனமான ‘ரிவோல்ட் மோட்டார்ஸ்’, ஜனவரி மாதத்துக்குள்ளாக வாகனத்தை 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக மாற்றும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனம் தற்போது அதன் ‘ஆர்.வி., 400’ மின்சார வாகனத்துக்கான முன்பதிவை, மீண்டும் 70 நகரங்களில் துவங்கி உள்ளது.
அதிகரித்த நுகர்வோர் நம்பிக்கை
நகரங்களில் நுகர்வோர் நம்பிக்கை, செப்டம்பர் மாதத்தில் 1.9 சதவீதம் உயர்ந்துள்ளதாக, பி.சி.எஸ்.ஐ., குறியீட்டு எண் ஆய்வு தெரிவித்துள்ளது.குறிப்பாக, தனிநபர் நிதி மற்றும் எதிர்கால முதலீடு ஆகியவற்றில், நுகர்வோர் நம்பிக்கை நன்றாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பொருளாதார மீட்சி வேகம் பிடிப்பதை அடுத்து, நுகர்வோர் நம்பிக்கையும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக இழப்பு
இந்திய பங்குச் சந்தைகள், இரண்டாவது நாளாக சரிவைக் கண்ட நிலையில், முதலீட்டாளர்கள் இவ்விரு நாட்களில் மட்டும் 6.6 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 3.3 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.சந்தை உச்சத்தை எட்டிய நிலையில், பெரு முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்று லாபம் பார்க்க முனைந்ததை அடுத்து, இரு நாட்களாக சந்தை சரிவை கண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|