முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா அழைப்பு முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா அழைப்பு ... லாக் டவுனிற்குப் பிறகு சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள் : தாம்ஸ்குக் ஆய்வில் தகவல் லாக் டவுனிற்குப் பிறகு சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள் : தாம்ஸ்குக் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘பேடிஎம்' பங்குகளை வாங்கும் சுவிட்சர்லாந்து நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
20:23

புதுடில்லி:‘பேடிஎம் இன்சூர்டெக்’ நிறுவனத்தின், 23 சதவீத பங்குகளை, சுவிட்சர்லாந்தின் ‘சுவிஸ் ரே’ நிறுவனம், 920 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரை தலைமையிடமாக வைத்து, சுவிஸ் ரே என்ற மறுகாப்பீட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி சார்ந்த சேவைகளை வழங்கி வரும் பேடிஎம் நிறுவனத்தின் காப்பீட்டு பிரிவான ‘பேடிஎம்’ இன்சூர்டெக் பி.ஐ.டி., நிறுவனத்தின் பங்குகளை விலைக்கு வாங்க உள்ளது.

அதன்படி, சுவிஸ் ரே நிறுவனத்திற்கு, தன் 23 சதவீத பங்குகளை விற்க, பேடிஎம் இன்சூர்டெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இது குறித்து பேடிஎம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பேடிஎம் இன்சூர்டெக் பி.ஐ.டி., நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளை வாங்க, சுவிஸ் ரே நிறுவனம் 920 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த முதலீடு வாயிலாக, சந்தையில் காப்பீட்டு பாதுகாப்பில் உள்ள இடைவெளியை அடைக்க, இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பேடிஎம் தலைவர் விஜய் சேகர் சர்மா கூறுகையில், “முக்கிய முதலீட்டாளரான சுவிஸ் ரே நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்கள் நிதி சேவைகளுக்கான பயணத்தில், இது ஒரு முக்கிய மைல் கல்லாகும்,” என்றார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)