பதிவு செய்த நாள்
28 அக்2021
21:28
புதுடில்லி:‘பேடிஎம்’ எனும் பிராண்டு பெயரில், நிதி தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் ‘ஒன்நைன்செவன் கம்யூனிகேஷன்’ நிறுவனம், நவம்பர் 8ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஒரு பங்கின் விலை 2,080 – 2150 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஒரு பங்கின் முக மதிப்பு 1 ரூபாய் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.பேடிஎம் பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, இது ஒரு மெகா பங்கு வெளியீடு எனக் கருதப்படுகிறது. இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் வாயிலாக 18 ஆயிரத்து, 300 ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இதுநாள் வரை இவ்வளவு பெரிய தொகையிலான பங்கு வெளியீடு வந்ததில்லை. இதற்கு முன் ‘கோல் இந்தியா’ நிறுவனம் தான் அதிக தொகை மதிப்பிலான பங்கு வெளியீட்டுக்கு வந்தது.இந்த பங்கு வெளியீட்டின்போது, 8,300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
பங்கு வெளியீடு, நவம்பர் 8ம் தேதி துவங்கி, 10ம் தேதியன்று முடிவுக்கு வருகிறது. இந் நிறுவன பங்குகள், தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|