பதிவு செய்த நாள்
28 அக்2021
21:36
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், பழைய கார் சந்தையானது, புதிய கார் சந்தையை விட அதிக வளர்ச்சி பெறும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஓ.எல்.எக்ஸ்., -– கிரிசில் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பழைய கார் சந்தை அண்மை காலமாக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில், புதிய கார் சந்தையை விட இந்த சந்தையானது அதிக வளர்ச்சி காணும்.கிட்டத்தட்ட 15 சதவீத வளர்ச்சியை எட்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 70 லட்சம் கார் சந்தையாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதற்கு முக்கிய காரணம், நிறைய பேர் கொரோனாவுக்கு பின் பொது போக்குவரத்தை பயன்படுத்த விரும்புவதில்லை என்பது. அடுத்த முக்கியமான காரணம் டிஜிட்டல் வளர்ச்சி. இத்துறை டிஜிட்டல் மயமாகி வருவதால், விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது.இந்த டிஜிட்டல் மாற்ற மானது வெளிப்படை தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.
மேலும் சந்தையை விரிவுபடுத்தவும் உதவிகரமாக உள்ளது. நுகர்வோருக்கான வாய்ப்புகளும் இதனால் அதிகரித்துள்ளன. முதன் முதலாக கார் வாங்க விரும்பும் இளைஞர்களுக்கு, இந்த டிஜிட்டல் விற்பனை தளங்கள் மிகவும் வசதியாக இருக்கின்றன; நிறைய ‘சாய்ஸ்’ கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், முதன் முதலாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை 8 – 10 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|