பதிவு செய்த நாள்
05 நவ2021
19:30
புதுடில்லி:ஸ்காட்லாந்தை சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ‘கெய்ர்ன் எனர்ஜி’ டிசம்பர் 13ம் தேதியிலிருந்து நிறுவனத்தின் பெயரை, ‘கேப்ரிகார்ன் எனர்ஜி’ என மாற்றி கொள்கிறது.
இருப்பினும், லண்டன் பங்குச் சந்தையில் நிறுவனத்தின் குறியீடு, சி.என்.இ., என்றே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கெய்ர்ன் பிராண்டு முழுக்க முழுக்க வேதாந்தா நிறுவனத்தின் வசமாகிறது.கெய்ர்ன் எனர்ஜி தன் பங்குகளை வேதாந்தா குழுமத்திற்கு விற்ற பின், 2011ல் அது இந்திய செயல்பாடுகளில் இருந்து வெளியேறியது. கெய்ர்ன் பிராண்டு வேதாந்தாவுக்கு சொந்தமாகி விட்ட பின்னும், கெய்ர்ன் பெயர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.
கெய்ர்ன் இந்தியா முழுக்க வேதாந்தா வசமான பின், கெய்ர்ன் எனர்ஜி, கெய்ர்ன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் தனித்தனியாக மாறின. பின் 2017ல் கெய்ர்ன் இந்தியா, வேதாந்தா நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, ‘கெய்ர்ன் ஆயில் அண்டு கியாஸ்’ என பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில், கெய்ர்ன் எனர்ஜி தன் பெயரை டிசம்பர் 13ம் தேதியிலிருந்து, கேப்ரிகார்ன் எனர்ஜி என மாற்றி கொள்கிறது.இதையடுத்து, கெய்ர்ன் பிராண்டு பெயர், முழுக்க முழுக்க வேதாந்தா நிறுவனத்தின் வசமாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|