பதிவு செய்த நாள்
06 நவ2021
19:16
42 நிறுவனங்கள் தேர்வு
வீட்டு உபயோக சாதனங்கள் துறையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் 42 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘பானாசோனிக் டாய்க்கின், சிஸ்கா, ஹேவல்ஸ்’ உள்ளிட்ட 42 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 4,614 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளன.
வங்கி கடன் வளர்ச்சி
அக்டோபர் 22ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வார காலத்தில், வங்கி கடன் வளர்ச்சி 6.84 சதவீதமும், டெபாசிட் 9.94 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.இதற்கு முந்தைய அக்டோபர் 8ம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலத்தில், வங்கி கடன் வளர்ச்சி 6.48 சதவீதமாகவும், டெபாசிட் 10.16 சதவீதமாகவும் இருந்தது.
பட்ஜெட் குறித்த பரிந்துரை
வரும் 2022 – 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வரிவிதிப்பு குறித்த பரிந்துரைகளை, தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளிடமிருந்து நிதி அமைச்சகம் கேட்டுள்ளது.வரி விதிப்பு விகிதங்கள், வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கான பரிந்துரைகளை, இம்மாதம் 15ம் தேதிக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா இல்லாத கண்காட்சி
சீனாவின் மிகவும் பிரபலமான இறக்குமதி கண்காட்சி, நடப்பு ஆண்டில் இந்திய வணிகங்களின் பங்களிப்பு இல்லாமல், ஷாங்காய் நகரில் திறக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையேயான பயணங்களில் தடைகள் இருப்பதால், இந்திய வணிக நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்னிய செலாவணி இருப்பு
கடந்த அக்டோபர் 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 14 ஆயிரத்து 250 கோடி ரூபாய் அதிகரித்து, 48.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்வைக் கண்டுள்ளது.தங்கத்தின் இருப்பு, இவ்வாரத்தில், 4,290 கோடி ரூபாய் அதிகரித்து, 2.93 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|