பதிவு செய்த நாள்
06 நவ2021
19:30
புதுடில்லி:சீன ரியல் எஸ்டேட் துறை, அடி மீது அடி வாங்கிக்கொண்டிருக்கிறது. அண்மையில், அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘எவர்கிராண்டு’ நிதிச் சிக்கலில் சிக்கியது.இப்போது, இதே போல் இன்னொரு நிறுவனமும் நிதிப்பிரச்னையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
‘கைசா குழுமம்’ எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம், கடன் நிலுவை தொகையை செலுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.இதன் காரணமாக, இக்குழுமத்தின் பங்குகள், ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இடைநிறுத்தப்பட்டது.அதுமட்டுமின்றி; இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களும் வர்த்தகத்தில் இருந்து நிறுத்தப்பட்டன.
வர்த்தகத்திலிருந்து நிறுத்தப்பட்டது குறித்து, கைசா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் ஒரு நாள் முன்னதாக, நிதி விவகாரத்தில் முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை நிறுவனம் சந்தித்து வருவதாக தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, இந்நிறுவனம் குறித்த பன்னாட்டு தரமதிப்பீடும் சரிவை கண்டதால், அதுவும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.தற்போது இன்னொரு ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘மாடர்ன் லேண்டு’ எனும் ரியல் எஸ்டேட் நிறுவனமும் கடன் பிரச்னையில் சிக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|