பதிவு செய்த நாள்
10 நவ2021
21:59
புதுடில்லி:ஆன்லைன் மருந்து விற்பனை தளமான ‘பார்ம்ஈஸி’ நிறுவனத்தினுடைய தாய் நிறுவனமான ’ஏ.பி.ஐ., ஹோல்டிங்ஸ்’ ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 6,250 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தனி ஒதுக்கீட்டின் வாயிலாக 1,250 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு திரட்டப்படும் பட்சத்தில், புதிய பங்கு வெளியீட்டு தொகை குறையக்கூடும். இந்த பங்கு வெளியீட்டின்போது முழுக்க புதிய பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக நிதி திரட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரட்டப்படும் நிதியில் கடனை அடைப்பதற்காக 1,929 கோடி ரூபாயும்; மருந்தகங்கள் அமைப்பதற்காக 1,259 கோடி ரூபாயும், கையகப்படுத்தும் முயற்சிகளுக்காக 1,500 கோடி ரூபாயும்; மீதம் பொதுவான நிர்வாக செலவுகளுக்காகவும் ஒதுக்கப்பட உள்ளது.கடந்த ஜூன் மாதம் பார்ம்ஈஸி நிறுவனம் ‘தைரோகேர்’ நிறுவனத்தை 4,546 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த இருப்பதாக தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|