பதிவு செய்த நாள்
26 நவ2021
21:19
புதுடில்லி:அண்மைக் காலமாகவே, ‘டாடா குழுமம்’ செமிகண்டக்டர் வணிகத்தில் இறங்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது, மூன்று மாநிலங்களுடன் இந்நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனைக்கான ஆலையை துவக்குவது குறித்து, மூன்று மாநிலங்களுடன் இந்நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாகவும்; ஆலை அமைப்பதற்காக 2,250 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:செமிகண்டக்டர் வணிகத்தில் ஈடுபட விரும்புவது குறித்து, ஏற்கனவே நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசெம்பிளி மற்றும் சோதனைக்கான ஆலையை அமைப்பதற்காக 2,250 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களுடன் பேச்சு நடைபெற்று வருகிறது.
இந்த ஆலையில், ‘சிலிகான்’ செதில்கள், முழுமை பெற்ற ‘செமிகண்டக்டர் சிப்’களாக மாற்றப்படும். இதற்கு தகுந்த இடம் குறித்து நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. டாடா நிறுவனம் ஏற்கனவே மென்பொருள் துறையில் வலுவாக இருக்கும் நிலையில், வன்பொருள் துறையிலும் கால்பதிக்க விரும்புகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|