பதிவு செய்த நாள்
27 நவ2021
20:27
அன்னிய செலாவணி இருப்பு
நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2,168 கோடி ரூபாய் அதிகரித்து, 48.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தங்கத்தின் இருப்பும் 1,140 கோடி ரூபாய் அதிகரித்து, 3.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
இந்தியா – கனடா வர்த்தகம்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம், மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம், தற்போது 75 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் கார்ப்பரேட் ஹோல்டிங்ஸ்
ரிசர்வ் வங்கி, தனியார் துறை வங்கிகளில் கார்ப்பரேட் ஹோல்டிங்ஸ் குறித்த அதன் பணிக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.தனியார் வங்கிகளில், புரமோட்டர்களின் ஹோல்டிங்சை, 15 ஆண்டுகளுக்கு பின், தற்போதுள்ள 15 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்த்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
செயல்சாரா இயக்குனர் பதவி
எஸ்.பி.ஐ., வங்கியின் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமார், இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனத்தின் செயல்சாரா இயக்குனராக சேர்ந்துள்ளார்.எஸ்.பி.ஐ., தலைவராக ரஜினிஷ் குமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றி, கடந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இழப்பை சந்தித்த ‘பேடிஎம்’
‘பேடிஎம்’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்’ கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 473 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.இந்நிறுவனத்தின் பங்குகள், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பின், தொடர்ந்து சரிவை கண்டு வருவதும் கவனிக்கத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|