பதிவு செய்த நாள்
14 டிச2021
09:57
புதுடில்லி : விமான சேவைகளை வழங்கி வரும் ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம், ட்ரோன்கள் வாயிலாக, மருந்துகளை டெலிவரி செய்வது குறித்து திட்டமிட்டு வருகிறது.
இந்நிறுவனம், நாட்டில் உள்ள அணுகுவதற்கு கடினமான பகுதிகளுக்கு, உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், அத்தியாவசியமான பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பு வதற்கு வசதியாக, ஆளில்லாமல் பறக்கும் ட்ரோன் எனும், குட்டி விமான சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது.இதற்காக இந்நிறுவனம், ஏற்கனவே கடந்த ஆண்டு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் ஒப்புதலையும் பெற்றுஉள்ளது.
முதற்கட்டமாக, நாட்டிலுள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த 150 இடங்களில், இந்த சேவையை துவக்க திட்டமிட்டுஉள்ளது. மேலும், துவக்கத்தில் மாதத்திற்கு 25 ஆயிரம் டெலிவரிகளை மேற்கொள்ளவும் இந்நிறுவனம் திட்டமிட்டுஉள்ளது.இந்த புதிய வணிக சேவையை முன்னிட்டு, 50 பிரத்யேக ட்ரோன்களுக்காக, ‘திரோட்டில் ஏரோஸ்பேஸ்’ எனும் நிறுவனத்துடன் ஸ்பைஸ்ஜெட் கூட்டு சேர்ந்துஉள்ளது.
இதையடுத்து, 5 – 10 கிலோ, 10 – 25 கிலோ என பலவிதமான எடையை தாங்கும் வகையில், பல்வேறு வகையான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|