ரூ.60,000 கோடி வரி ஏய்ப்பு  4 நிறுவனங்களில் சோதனை ரூ.60,000 கோடி வரி ஏய்ப்பு 4 நிறுவனங்களில் சோதனை ...  நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 60 லட்சம் டன் ஆக உயரும் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 60 லட்சம் டன் ஆக உயரும் ...
ஜி.எஸ்.டி., படிவம் தாக்கல் செய்ய பதிவு செய்யப்பட்ட அழைப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2021
19:06

சென்னை:சென்னை அண்ணாநகரில் உள்ள, சென்னை புறநகர் ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகத்தில், ஜி.எஸ்.டி.,யில் உள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல் நடந்தது.
இதில், கார் மற்றும் வாகன உதிரி பாகங்கள், டெக்ஸ்டைல், மருந்து, தோல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, வர்த்தகம் செய்யும் போது, ஜி.எஸ்.டி., சட்டத்தால் எதிர்கொள்ளும் சிரமங்களை, அதிகாரிகள் கவனத்திற்கு பிரதிநிதிகள் கொண்டு வந்தனர்.
அவர்கள் எடுத்துக் கூறிய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, மாதந் தோறும் ஜி.எஸ்.டி., ஆர் படிவம் 1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்., படிவம் – 3பி ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.இதை நினைவுபடுத்தும் வகையில், பதிவு செய்யப்பட்ட தானியங்கி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி, தலைமை கமிஷனர் சவுத்ரி தலைமையில், முதன்மை கமிஷனர் ரவி செல்வன் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.
புறநகர் கமிஷனர் அலுவலகத்தின் கீழ், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளன. இதன் கீழ், 70 ஆயிரம் வணிகர்கள் பதிவு செய்துள்ளனர்.இந்த வசதியின் கீழ், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு, பதிவு செய்யப்பட்ட தானியங்கி நினைவூட்டல் அழைப்புகள் அனுப்பப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)