பதிவு செய்த நாள்
18 டிச2021
19:06
சென்னை:சென்னை அண்ணாநகரில் உள்ள, சென்னை புறநகர் ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகத்தில், ஜி.எஸ்.டி.,யில் உள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல் நடந்தது.
இதில், கார் மற்றும் வாகன உதிரி பாகங்கள், டெக்ஸ்டைல், மருந்து, தோல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, வர்த்தகம் செய்யும் போது, ஜி.எஸ்.டி., சட்டத்தால் எதிர்கொள்ளும் சிரமங்களை, அதிகாரிகள் கவனத்திற்கு பிரதிநிதிகள் கொண்டு வந்தனர்.
அவர்கள் எடுத்துக் கூறிய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, மாதந் தோறும் ஜி.எஸ்.டி., ஆர் படிவம் 1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்., படிவம் – 3பி ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.இதை நினைவுபடுத்தும் வகையில், பதிவு செய்யப்பட்ட தானியங்கி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி, தலைமை கமிஷனர் சவுத்ரி தலைமையில், முதன்மை கமிஷனர் ரவி செல்வன் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.
புறநகர் கமிஷனர் அலுவலகத்தின் கீழ், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளன. இதன் கீழ், 70 ஆயிரம் வணிகர்கள் பதிவு செய்துள்ளனர்.இந்த வசதியின் கீழ், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு, பதிவு செய்யப்பட்ட தானியங்கி நினைவூட்டல் அழைப்புகள் அனுப்பப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|