பதிவு செய்த நாள்
17 டிச2021
21:42
புதுடில்லி:வங்கிகளின் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடனை வசூலித்ததில், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, நான்கு நிறுவனங்களுக்குச் சொந்த மான 60 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
வங்கிகள் அவற்றின் வாராக் கடனை மீட்கும் பொறுப்பை, சொத்து மீட்பு நிறுவனங்களிடம் வழங்குகின்றன.இந்நிறுவனங்கள் வசூலிக்கும் வாராக் கடனில், ஒப்பந்தப்படி குறிப்பிட்ட தொகையை வங்கிகளுக்கு வழங்கி, எஞ்சியதை வைத்துக் கொள்கின்றன.
இந்த வகையில், சி.எப்.எம்., அசெட் ரீகன்ஸ்ட்ரக் ஷன், ஓம்காரா அசெட் ரீகன்ஸ்ட்ரக் ஷன், ரேர் ஏ.ஆர்.சி., இன்வென்ட் ஏ.ஆர்.சி., ஆகிய நான்கு நிறுவனங்கள், 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வாராக் கடனை வசூலித்துஉள்ளன.
ஆனால், அதில், 20 சதவீத அளவிற்கே, அதாவது, 15 ஆயிரம் கோடிக்கு மட்டுமே வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, வருமான வரித் துறையினர், அந்த நான்கு நிறுவனங்களுக்கு சொந்த மான, 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|