பதிவு செய்த நாள்
17 டிச2021
21:37
மும்பை:‘கொரோனா காரணமாக, நடப்பு நிதியாண்டில் உடல் பரிசோதனை துறையின் வருவாய், 55 சதவீதம் உயரும்’ என, ‘இக்ரா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு 2021 – 22ம் நிதியாண்டில், உடல் பரிசோதனை துறையின் வருவாய், 55 சதவீதம் வளர்ச்சி காணும்.கொரோனா பரிசோதனைகள் காரணமாக, இந்த வளர்ச்சி சாத்தியமாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதுபோல, உடல் பரிசோதனை நிறுவனங்களின் செயல்பாட்டு லாபமும், 800 புள்ளிகள் உயரும்.
உடல் பரிசோதனை துறையில் அமைப்பு சாரா நிறுவனங்களின் போட்டி அதிகரித்து வருகிறது.இதனால் தற்போதைய உடல் பரிசோதனை கட்ட ணங்கள், அதிக மாற்றமின்றி நிலையாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. உடல் பரிசோதனை துறையின் வருவாய், கடந்த ஏப்., – செப்., வரையிலான ஆறு மாதங்களில், 74 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடல் பரிசோதனை துறையில், ‘லால் பத்லேப்ஸ், மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர், தைரோகேர் டெக்னாலஜிஸ், எஸ்.ஆர்.எல்., விஜயா டையாக்நாஸ்டிக்ஸ் சென்டர், கிரஸ்நாடையாக்நாஸ்டிக்ஸ்’ உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|