பதிவு செய்த நாள்
22 டிச2021
21:24
புதுடில்லி:பிரபல தொழில்நுட்ப நிறுவனமான எச்.பி., இந்தியாவில் ‘லேப்டாப், டெஸ்க்டாப்’ தயாரிப்பை துவக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், எச்.பி., நிறுவனம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள அதன் ஆலையில், பல்வேறு மாடல்களில் லேப்டாப், டெஸ்க்டாப் டவர்கள், மினி லேப்டாப் ஆகியவற்றை தயாரிக்க துவக்கி இருக்கிறது.
இந்த தயாரிப்புகளில் சில, அரசாங்கத்தின் பொது கொள்முதல் ஆணையின் கீழ் தகுதி பெற்றிருப்பதாகவும்; அரசு துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவை அரசின் ‘இ- – மார்க்கெட்பிளேஸ்’ இணையதளத்தில் இடம்பெறும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், இந்தியாவில் அதிக வகையிலான லேப்டாப்புகளை தயாரிப்பது இதுவே முதன் முறையாகும்.மத்திய அரசின் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ கனவை நனவாக்கும் முயற்சியில், எச்.பி., நிறுவனமும் உடன் நிற்கும் என்றும், இந்நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|