பதிவு செய்த நாள்
22 டிச2021
21:29
புதுடில்லி:புத்தாண்டுக்குள் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நுழையும் நிலையில், விற்பனை குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வாகன தயாரிப்புக்கு தேவையான பொருட்களின் விலை அதிகரிப்பு, ‘செமிகண்டக்டர் சிப்’ தட்டுப்பாடு, அதிகரிக்கும் ‘ஒமைக்ரான்’ தொற்று என, பல இடையூறுகளுக்கு இடையேயும், வரும் ஆண்டில் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளிப்படுத்தி உள்ளன.
இது குறித்து, ‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கூறும்போது, ‘‘நடப்பு ஆண்டில் செமிகண்டக்டர் தட்டுப்பாட்டினால், கடுமையான உற்பத்தி இழப்பை சந்திக்க வேண்டியதாகிவிட்டது. ‘‘விரைவில் நிலைமை சரியாகிவிடும் என்பதால், புத்தாண்டில் விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.
“தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதால், ஒமைக்ரான் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என நம்பலாம்.‘‘எனவே, விற்பனை அதிகரிக்கும்” என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்க கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|