பதிவு செய்த நாள்
23 டிச2021
20:28
புதுடில்லி,:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், மின்சார வாகன தயாரிப்புக்காகவே, தனியாக துணை நிறுவனம் ஒன்றை துவங்கி இருப்பதாக தெரிவித்து உள்ளது.
‘டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி’ எனும் பெயரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந் நிறுவனம், முழுக்க முழுக்க, டாடா குழுமத்துக்கு சொந்தமானதாகும் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
இந்த துணை நிறுவனம், அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கான தயாரிப்பு, வடிவமைப்பு, பழுது நீக்கும் சேவை சம்பந்தமான விஷயங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்ளும்.இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வசம் இருக்கும். இந்த புதிய துணை நிறுவனம், 700 கோடி ரூபாய் ஆரம்ப மூலதனத்துடன் துவக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில், மின்சார வாகன தயாரிப்பு பிரிவில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, கடந்த அக்டோபரில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அதன் தொடர்ச்சியாக, மின் வாகன தயாரிப்பு சம்பந்தமான பணிகளை விரைவுபடுத்தி வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|