பதிவு செய்த நாள்
25 டிச2021
20:04
திவால் சட்ட திருத்தம்
திவால் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பல்வேறு திருத்தங்கள் குறித்து, கருத்துகளை தெரிவிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இதில், தீர்வுத் திட்டங்களின் ஒப்புதலுக்கான கால அவகாசம் மற்றும் தவிர்க்கக்கூடிய பரிவர்த்தனைகள் மற்றும் தவறான வர்த்தகம் ஆகியவை குறித்த கருத்துகளை அரசு அறிய விரும்புகிறது.
‘5ஜி ஸ்பெக்ட்ரம்’ ஏலம்
தொலை தொடர்பு ஒழுங்குறை ஆணையமான ‘டிராய்’ 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த எழுத்துப்பூர்வமான ஆலோசனை கருத்துகளை பெறுவதற்கான கடைசி தேதியை நீட்டித்து, ஜனவரி 10 என அறிவித்துள்ளது.முன்னதாக, ஆலோசனைகளை எழுத்துபூர்வமாக தெரிவிப்பதற்கு டிசம்பர் 28 கடைசி தேதி என்றும், எதிர்கருத்தை தெரிவிப்பதற்கு கடைசி தேதி ஜனவரி 11 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய பங்கு வெளியீடு
மும்பையைச் சேர்ந்த ‘ஹெக்ஸகன் நியுட்ரிஷன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 600 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வேகமெடுக்கும் ‘வீடியோ கேமிங்’
நாட்டின் ‘வீடியோ கேமிங்’ துறை, 2025ல், 29 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பு துறையாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 5ஜி அறிமுகம் இதை இன்னும் வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது வீடியோ கேம் விளையாடுபவர்களில் 40 சதவீதம் பேர், ஒரு மாதத்துக்கு 230 ரூபாய் என்ற அளவில் செலவு செய்வதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
மெய்நிகர் நாணய முதலீடு
இந்தியாவில் 1.5 கோடி சில்லரை முதலீட்டாளர்கள், ‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்களில் முதலீட்டை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கிட்டத்தட்ட 49 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு முதலீட்டை மேற்கொண்டு இக்கின்றனர். இந்த சில்லரை முதலீட்டாளர்களில் 90 சதவீதம் பேர் நடப்பு ஆண்டில் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|