பதிவு செய்த நாள்
25 டிச2021
20:08
புதுடில்லி:இந்தியாவிலிருந்து சீனாவுக்கான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நவம்பர் மாதத்தில், இரு மடங்கு அதிகரித்து உள்ளது.
இது குறித்து, ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பான இ.இ.பி.சி., தெரிவித்து உள்ளதாவது: இந்தியாவிலிருந்து சீனாவுக்கு, கடந்த நவம்பர் மாதத்தில், 3,260 கோடி ரூபாய் மதிப்பிலான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 1.540 கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி ஆகியிருந்தது. நடப்பு நவம்பரில், ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்துஉள்ளது. இருப்பினும், இந்தியாவிலிருந்து பொறியியல் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.
கடந்த நவம்பரில், அமெரிக்காவுக்கு 8,970 கோடி ரூபாய் மதிப்பிலான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன.மூன்றாவது இடத்தில் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளன. இங்கு 3,033 கோடி ரூபாய் மதிப்பிலான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இருப்பினும், அனைத்து நாடுகளுக்குமான மொத்த பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது. கடந்த அக்டோபரில் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, நவம்பரில் 57 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துவிட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|