பதிவு செய்த நாள்
28 டிச2021
09:42
புதுடில்லி : கடந்த, 2020 – 21ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான ‘கெடு’ வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், டிசம்பர் 26 வரை, 4 கோடியே 51 லட்சத்து 95 ஆயிரத்து 418 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதில், சாஹஜ் எனும் ‘ஐ.டி.ஆர்., – படிவம் 1’ல், 2 கோடியே 44 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். சுகம் எனும் ‘ஐ.டி.ஆர்–படிவம்4’ல் 1 கோடியே 12 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.சாஹஜ் படிவம், ஊதியதாரர்களுக்கானது. ஆண்டுக்கு, 50 லட்சம் வரை ஊதியம், ஒரு வீடு அல்லது வட்டி உள்ளிட்ட இதர வகை வருவாய் உள்ளோர் சாஹஜ் படிவத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வணிகம் மற்றும் தொழில் வாயிலாக வருவாய் ஈட்டும் தனி நபர்கள், ஹிந்து கூட்டுக் குடும்பத்தினர், சுகம் படிவத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.கொரோனா காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான ‘கெடு’ ஜூலை 31லிருந்து, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2019 – 20ம் நிதியாண்டிற்கு, 5 கோடியே 95 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|