பதிவு செய்த நாள்
28 டிச2021
09:40
புதுடில்லி : ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால், 'ஏர் இந்தியா' நிறுவனத்தை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இழப்பில் உள்ள பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா சன்ஸ், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, டாடா சன்ஸ், 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கும். எஞ்சிய தொகையான, ஏர் இந்தியாவின் கடனுக்கு டாடா சன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த பணிகள் அனைத்தையும், டிசம்பர் 31க்குள் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், சில ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதிக்கு காத்திருப்பதால், ஏர் இந்தியா கைமாறுவது தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் ஒப்பந்தப்படி அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|