வர்த்தகம் » பொது
தமிழகத்தில் ரூ.55 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு ஈர்ப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 ஜன2022
20:39
சென்னை:தமிழகத்தில் ஒன்பது மாதங்களில், 55 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது; இதன் வாயிலாக, 1.65 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என, தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 9.84 சதவீதம் பங்களிப்பை வழங்கும், இரண்டாவது பெரிய பொருளாதாரம் உடைய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.வரும் 2030க்குள், 23 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும், 46 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில், 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உற்பத்தி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, 55 கோடி ரூபாய் வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது; 1.65 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.இதில், மூன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உற்பத்தியை துவங்கும் நிலையில் தங்களது பணிகளை விரைவாக செய்து வருகின்றன.
பல்வேறு நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன. மேலும், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிலம் வாங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளன. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழில் துவங்குவதற்கு ஏதுவான நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
மேற்கொள்ளப்பட்ட, 100 ஒப்பந்தங்களில், 50 நிறுவனங்கள், தொழிற்சாலைகளை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை, துவக்கி உள்ளன. கொரோனா காலத்திலும், தமிழகத்தில் 55 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்து, தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 04,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 04,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 04,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 04,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!