மத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தால் 13.5 லட்சம் நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன மத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தால் 13.5 லட்சம் நிறுவனங்கள் ... ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘டிமேட்’ கணக்குகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2022
20:54

மும்பை:கடந்த இரண்டு ஆண்டுகளில், ‘டிமேட்’ கணக்குகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் தலைவர் அஜய் தியாகி தெரிவித்துள்ளார்.
ஒரு வங்கியில் பணம் சேமிப்பதற்கு முன், அங்கே ஒரு கணக்கை நாம் துவக்குவது போல, பங்குச் சந்தை முதலீட்டுக்கு டிமேட் கணக்கு துவக்க வேண்டும்.கடந்த காலங்களில், ஒரு நிறுவனத்தின் பங்கை நாம் வாங்கினால், அதற்கு சான்றாக, காகிதத்திலான சான்றிதழை வழங்குவர். இதில் பலவிதமான சிரமங்கள் இருந்தன. கிழிந்துபோவது, தொலைந்துபோவது, தீயில் எரிந்து போவது என பல அபாயங்கள் இவற்றில் உண்டு.
இதற்கு மாற்றாக, மின்னணு வடிவில் சான்றிதழ்களை வைத்துக் கொள்வதற்கான கணக்கு தான் டிமேட் கணக்கு.கடந்த 20 ஆண்டுகளில் எவ்வளவு கணக்கு துவக்கப்பட்டதோ, அது இப்போது இரு ஆண்டு களிலேயே துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அஜய் தியாகி மேலும் கூறியதாவது:கடந்த 2019 மார்ச் மாதத்தில் 3.6 கோடி டிமேட் கணக்குகள் இருந்த நிலையில், கடந்த 2021 நவம்பரில் அது 7.7 கோடி கணக்குகளாக அதிகரித்துள்ளது.கொரோனா காரணமாக ஊரடங்குகள் பிறப்பிக்கப்படவும், லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற துவங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, பங்குச் சந்தை முதலீட்டுக்குள்ளும் அவர்கள் நுழைந்தனர். அப்படி டிமேட் துவங்கியவர்களில் 75 சதவீதம் பேர், 30 வயதுக்கு உட்பட்டவர்கள். கடந்த 2019 – 2020ம் நிதியாண்டில், மாதம் ஒன்றுக்கு சராசரியாக நான்கு லட்சம் புதிய கணக்குகள் துவக்கப்பட்டன.
இது மேலும் அதிகரித்து, கடந்த ஆண்டு நவம்பரில் மட்டும் அதிகபட்சமாக 29 லட்சம் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன.இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)