பதிவு செய்த நாள்
06 ஜன2022
21:34
புதுடில்லி:நடப்பு ஆண்டில் மொத்த மின்சார வாகனங்களின் விற்பனை, 10 லட்சத்தை தொடும் என மின்சார வாகன தயாரிப்பாளர்களின் சங்கமான எஸ்.எம்.இ.வி., தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டில் மொத்த மின்சார வாகனங்களின் விற்பனை 10 லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2021ம் ஆண்டில், மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை இரு மடங்கு அதிகரித்து, 2.34 லட்சமாக உயர்ந்துள்ளது; 2020ல் விற்பனை ஒரு லட்சமாக இருந்தது.
கடந்த நான்கு மாதங்களில், இது போன்ற விற்பனையை நாங்கள் சந்தித்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளில், மொத்தம் 20 லட்சம் மின்சார வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருக்கிறோம். இதில் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அடக்கம்.
ஆனால், நடப்பு ஆண்டில் மட்டுமே 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துவிட முடியும் எனக் கருதுகிறோம்.அரசின் மின் வாகன கொள்கையில், அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.அத்துடன், நுகர்வோர் பெட்ரோல் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதில் இருந்து, மின்சார இருசக்கர வாகனத்தை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.
கவர்ச்சிகரமான விலை, குறைந்த செலவு, குறைவான பராமரிப்பு போன்றவை இதற்கு காரணம்.இன்னும் ஐந்து ஆண்டு களில், மொத்த இருசக்கர வாகனங்களில் 30 சதவீதம், மின்சார வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|