மத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தால் 13.5 லட்சம் நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன மத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தால் 13.5 லட்சம் நிறுவனங்கள் ... ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நடப்பு ஆண்டில் மின் வாகன விற்பனை 10 லட்சத்தை தொடும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2022
21:34

புதுடில்லி:நடப்பு ஆண்டில் மொத்த மின்சார வாகனங்களின் விற்பனை, 10 லட்சத்தை தொடும் என மின்சார வாகன தயாரிப்பாளர்களின் சங்கமான எஸ்.எம்.இ.வி., தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டில் மொத்த மின்சார வாகனங்களின் விற்பனை 10 லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2021ம் ஆண்டில், மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை இரு மடங்கு அதிகரித்து, 2.34 லட்சமாக உயர்ந்துள்ளது; 2020ல் விற்பனை ஒரு லட்சமாக இருந்தது.
கடந்த நான்கு மாதங்களில், இது போன்ற விற்பனையை நாங்கள் சந்தித்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளில், மொத்தம் 20 லட்சம் மின்சார வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருக்கிறோம். இதில் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அடக்கம்.
ஆனால், நடப்பு ஆண்டில் மட்டுமே 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துவிட முடியும் எனக் கருதுகிறோம்.அரசின் மின் வாகன கொள்கையில், அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.அத்துடன், நுகர்வோர் பெட்ரோல் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதில் இருந்து, மின்சார இருசக்கர வாகனத்தை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.
கவர்ச்சிகரமான விலை, குறைந்த செலவு, குறைவான பராமரிப்பு போன்றவை இதற்கு காரணம்.இன்னும் ஐந்து ஆண்டு களில், மொத்த இருசக்கர வாகனங்களில் 30 சதவீதம், மின்சார வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)