ஆக்சிஸ் வங்கியின் இளம் வங்கியர் திட்டம்ஆக்சிஸ் வங்கியின் இளம் வங்கியர் திட்டம் ...  ‘உள்கட்டமைப்பு’ அந்தஸ்து தேவை விருந்தோம்பல் துறையினர் கோரிக்கை ‘உள்கட்டமைப்பு’ அந்தஸ்து தேவை விருந்தோம்பல் துறையினர் கோரிக்கை ...
நுகர்பொருள் சாதன விலை 5 – 10 சதவீதம் அதிகரிக்கும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2022
11:10


புதுடில்லி : அண்மைக் காலமாக, உள்ளீட்டு பொருட்களுக்கான விலை அதிகரித்து வருவதை அடுத்து, கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளன. அடுத்து, நுகர்பொருள் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்கும் விதமாக, நுகர்பொருள் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் 5- – 10 சதவீதம் அளவுக்கு விலை அதிகரிக்க உள்ளன. இந்த விலை உயர்வு, இம்மாதமே அமலுக்கு வரலாம் அல்லது பட்ஜெட்டுக்கு பின், மார்ச் மாதத்திலிருந்து வரலாம் எனக் கூறப்படுகிறது.இதையடுத்து, ஏர்கண்டிஷனர்கள், ரெப்ரிஜிரேட்டர்கள் போன்றவற்றின் விலை மேலும் அதிகரிக்க கூடும்.
ஏற்கனவே பானாசோனிக், எல்.ஜி., போன்ற நிறுவனங்கள் விலையை உயர்த்தி விட்டன. ‘ஏர்கண்டிஷனர்’கள் விலை 8 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர நிறுவனங்களான சோனி, ஹிட்டாச்சி, கோத்ரெஜ் அப்ளையன்சஸ் போன்ற நிறுவனங்கள், முதல் காலாண்டின் இறுதியில் விலையை உயர்த்தும் என தெரிகிறது.
ஜனவரி – மார்ச் காலகட்டத்தில் 5 – 7 சதவீதம் வரை விலை அதிகரிக்கலாம் என, நுகர்வோர் மின்னணு மற்றும் சாதனங்கள் தயாரிப்பாளர்களின் சங்கமான சி.இ.ஏ.எம்.ஏ., தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலை உயர்வு, உலகளவிலான போக்குவரத்து செலவு அதிகரிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருவது போன்றவற்றால், விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என, இத்துறையினர் கருதுகின்றனர்.
பண்டிகை கால விற்பனைக்காக, விலை உயர்வை பல நிறுவனங்கள் தள்ளி வைத்திருந்த நிலையில், விரைவில் விலை உயர்வு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)