பதிவு செய்த நாள்
11 ஜன2022
21:58
‘வோடபோன்’ வழியில் ‘டாடா’
‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தை தொடர்ந்து, ‘டாடா டெலிசர்வீசஸ்’ நிறுவனமும், அதன் ஏ.ஜி.ஆர்., எனும், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொகை பாக்கிக்கான வட்டியை, பங்குகளாக அரசுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது.இந்நிறுவனம், 850 கோடி ரூபாய் வட்டி பாக்கிக்காக, 9.5 சதவீத பங்குகளை அரசுக்கு வழங்க தயாராக உள்ளது.
சில்லரை விற்பனை அதிகரிப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில், சில்லரை விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது, 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.கடந்த 2020 டிசம்பருடன் ஒப்பிடும்போது, 26 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அரிசி ஏற்றுமதியாளர் கோரிக்கை
அரிசி ஏற்றுமதியாளர்கள், துறைக்கான வட்டி சலுகை திட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.வட்டி சலுகை திட்டம், கடந்த ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், சலுகை திட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் விரும்புகிறார்கள்.த
லைவரை தேடும் எஸ்.பி.ஐ.,
‘பாரத ஸ்டேட் வங்கி’ அதன் ‘டிஜிட்டல் பேங்கிங்’ பிரிவுக்கான தலைமைக்கு, தகுந்த நபரை நியமிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.வங்கி, நிதி சேவை, இன்சூரன்ஸ் போன்றவற்றில் டிஜிட்டல் பிரிவில், 18 ஆண்டு கால அனுபவமும், 5 ஆண்டு கால தலைமை பொறுப்பு அனுபவமும் கொண்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
பன்றி இறைச்சிக்கு அனுமதி
அமெரிக்க பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்க, இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தெரிவித்துள்ளார்.இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில், அமெரிக்க பன்றி இறைச்சி, இந்தியாவில் முதன் முறையாக இறக்குமதி ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|