பதிவு செய்த நாள்
11 ஜன2022
22:07
புதுடில்லி:நாட்டின் பொருளா தார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதமாக இருக்கும் என, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் விர்மானி கூறியுள்ளார்.
தொழில் துறை அமைப்பான பி.எச்.டி.சி.சி.ஐ., நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும். மேலும், நிதியாண்டு 21–-30 வரையிலான பத்து ஆண்டுகளில், சராசரி வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இதில், அரை சதவீதம் கூடுதலாக வோ அல்லது, குறைவாகவோ இருக்கலாம்.
அரசின் செலவினங்கள், ஏற்றுமதி ஆகியவை உச்சத்தில் உள்ளன. ஆனால், தனியார் நுகர்வு, கொரோனா காரணமாக இன்னும் மீட்சியடையாமல் உள்ளது.வளர்ச்சி ‘பாசிட்டிவ்’ ஆக இருந்தாலும், வேலை வாய்ப்பு வளர்ச்சியில் சுணக்கம் இருக்கிறது.நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் முக்கியமானவை. கார்ப்பரேட் துறையுடன் போட்டியிடுவதற்கு, இவற்றுக்கு முழு வாய்ப்புகள் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|