பதிவு செய்த நாள்
18 ஜன2022
10:17
புதுடில்லி : ‘ஏத்தர் எனர்ஜி’ நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதை அடுத்து, ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனத்தின் பங்கு விலை, நேற்று 6 சதவீதம் வரை அதிகரித்தது.
மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜியில், 420 கோடி ரூபாய் முதலீடு செய்ய, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு அதன் நிர்வாக குழு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, பங்குச்சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்று 6 சதவீதம் வரை அதிகரித்தது.
தற்போது ஏத்தர் எனர்ஜியில் 34.8 சதவீத பங்குகளை ஹீரோ மோட்டோகார்ப் வைத்துள்ளது. திட்டமிட்டுள்ளபடி 420 கோடி ரூபாயை முதலீடு செய்யும்பட்சத்தில், பங்குகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இது குறித்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், வளர்ந்து வரும் வாகன வணிகப் பிரிவின் தலைவர் ஸ்வதேஷ் ஸ்ரீவத்ஸ்தவா கூறியதாவது:
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில், அதன் துவக்க காலத்திலேயே முதலீடு செய்துள்ளோம். அதை தொடரும் விதமாக, மேலும் முதலீடு செய்ய உள்ளோம். அண்மைக் காலத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து, நாங்கள் வியப்படைந்துளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|