பதிவு செய்த நாள்
20 ஜன2022
21:06
காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை
காப்பீட்டுக்காக தற்போது உள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என பட்ஜெட்டை முன்னிட்டு, காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.மேலும், மக்கள் காப்பீட்டு பாலிசிகளை வாங்கும் விதமாக, வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ், தற்போது இருக்கும் 1.5 லட்சம் ரூபாய் எனும் வரம்பை, 2 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மூன்று இயக்குனர்கள் ராஜினாமா
வங்கி சாரா நிதி நிறுவனமான ‘பி.டி.சி., இந்தியா பைனான்ஷியல் சர்வீசஸ்’ நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து, ஒரே சமயத்தில் செயல் சாரா இயக்குனர்கள் மூவர் ராஜினாமா செய்துள்ளனர்.இந்நிறுவனத்தின் நிர்வாகம் சரியில்லை என காரணம் தெரிவித்து, இந்த மூவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துள்ளனர்.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லாபம்
நுகர்பொருள் விற்பனை நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் யுனிலீவர்’ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், டிசம்பர் காலாண்டில் 19 சதவீதம் அதிகரித்து, 2,300 கோடி ரூபாயை எட்டியுள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனையும் 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 13 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
எல்.எம்.எல்., எலக்ட்ரிக் ஒப்பந்தம்
‘எல்.எம்.எல்., எலக்ட்ரிக்’ நிறுவனம், ‘சேரா எலக்ட்ரிக் ஆட்டோ’ நிறுவனத்துடன் இணைந்து, மின்சார வாகன தயாரிப்பில் இறங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.சேரா எலக்ட்ரிக் ஆட்டோ நிறுவனம், இதற்கு முன்பாக ‘ஹார்லி டேவிட்சன்’ நிறுவனத்தின் மின்சார இரு சக்கர வாகனங்கங்களை தயாரித்து வழங்கி வந்தது.
வேலையில்லாதோர் எண்ணிக்கை
கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, இந்தியாவில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை 5.30 கோடி என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ. இ., தெரிவித்து உள்ளது.மேலும், இந்த வேலை இல்லாதவர்களில், பெண்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக அதாவது, 80 லட்சமாக இருப்பதாகவும் இம்மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|