பதிவு செய்த நாள்
29 ஜன2022
18:29
புதுடில்லி:சீனாவுக்கான ஏற்றுமதி, கடந்த ஆண்டில் 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஆண்டில், சீனாவுக்கான ஏற்றுமதி 34 சதவீதம் அதிகரித்து, 1.72 லட்சம் கோடி ரூபாயாக உயர்வை கண்டுள்ளது. இதுவே, கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு 1.28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி நடைபெற்றிருந்தது.கடந்த ஆண்டில் சீனாவுக்கான ஏற்றுமதி 34 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி 28 சதவீதம் அதிகரித்து, 6.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்வைக் கண்டுள்ளது.
இதையடுத்து, சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை 4.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இறக்குமதியை விட ஏற்றுமதி, கடந்த ஆண்டில் அதிக வேகம் பிடித்துள்ளது.
சீனாவுக்கான ஏற்றுமதி சிறப்பாக உள்ளது. நம் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க முடியும். வெளிநாட்டுடனான வர்த்தகத்தை பொறுத்தவரை, முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது; இரண்டாம் இடத்தில் சீனா உள்ளது.இவ்வாறு வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|