சீனாவுக்கான ஏற்றுமதி  34 சதவீதம் அதிகரிப்பு சீனாவுக்கான ஏற்றுமதி 34 சதவீதம் அதிகரிப்பு ...  வீட்டிலிருந்து பணி  82 சதவீதம் பேர் விருப்பம் வீட்டிலிருந்து பணி 82 சதவீதம் பேர் விருப்பம் ...
இந்தியாவில் வேகம் எடுக்கும் பழைய ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2022
18:32

புதுடில்லி:ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட பழைய ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை, இந்தியாவில் 2025ல், 34 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயரும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கமான ஐ.சி.இ.ஏ., மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஐ.டி.சி., ஆகியவை இணைந்து வழங்கியிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் பழைய ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் 2025ல், இந்த சந்தை 34 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, கிட்டத்தட்ட 2.50 கோடி ஸ்மார்ட்போன்கள், சராசரியாக 6,900 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வர்த்தகம் 17 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பழைய போன்களின் விற்பனை அதிகரித்து வருவதை அடுத்து, மின்னணு கழிவுகள் குறைந்து வருகிறது என்பது ஒரு சாதகமான விஷயம்.
பழைய ஸ்மார்ட் போன் விற்பனையை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 95 சதவீத போன்கள் அப்படியே கைமாற்றப்படுகின்றன. 5 சதவீத போன்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டோ அல்லது பழுது நீக்கப்பட்டோ விற்பனை செய்யப்படுகின்றன.பழைய ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக லேப்டாப், ஸ்மார்ட்வாட்சுகள், கேமிங் கன்சோல்கள், கேமராக்கள் ஆகியவற்றின் விற்பனையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
பழைய ஸ்மார்ட்போனை வாங்குபவர்களில் 78 சதவீதம் பேர், மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர். 18 சதவீதம் பேர், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை மாதச் சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)